ranil-maithriஉத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று நண்பகல் 12.15க்கு நியூசிலாந்து நோக்கிப் பயணமாகியுள்ளார்.

அந்நாட்டுப் பிரதமர் ஜோன் கீ விடுத்த விசேட அழைப்பையடுத்து, மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு, பிரதமர் பயணமானார். இந்நிலையில், இலங்கைப் பிரதமர் ஒருவர், நியூசிலாந்துக்கு விஜயம் செய்வது, இதுவே முதன்முறையாகும். இதில், பிரதமரின் பாரியார், அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ, சாகல ரத்நாயக்க, பிரதியமைச்சர் ஹர்ஷ டீ சில்வா மற்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே ஆகியோரும், அவருடன் பயணமாகியுள்ளனர்.