sss-2பங்களாதேஷ் கடற்படைக்கு சொந்தமான இரண்டு பயிற்சிக் கப்பல்கள் நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்துக்கு நேற்று வருகை தந்துள்ளன.“சோமுத்ரா அவிஜன்” மற்றும் “சோமுத்ரா ஜோய்” என்ற இரண்டு கப்பல்களே இவ்வாறு இலங்கைக்கு வருகை தந்துள்ளன.

குறித்த கப்பல்கள் 6 நாட்கள் விஜயத்தினை மேற்கொண்டுள்ளதுடன், இதில் 511 கடற்படை வீரர்கள் வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் கடற்படை வீரர்கள் இலங்கை கடற்படை வீரர்களுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்ள வுள்ளதுடன், கலாசார நிகழ்ச்சிகளிலும் பங்குகொள்ளவுள்ளனர்.