தமிழ் மக்களுடைய உடனடி அடிப்படைப் பிரச்சினைகளான காணி விடுப்பு, அரசியல் கைதிகளுடைய விடுதலை, காணாமல் போனோர் சம்பந்தமான விடயம், வேலை வாய்ப்பு, வாழ்வாதார விடயம் போன்றவற்றுக்கே தீர்வை வழங்க முடியாது திண்டாடும் இந்த அரசாங்கம் எவ்வாறு இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்கப் போகிறது என்ற கேள்வி இன்று பரவலாக எழத் தொடங்கியிருக்கிறது என்று தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இருந்தாலும் கூட இன்று இலங்கை அரசியல் மேடையில் சில நகர்வுகள் நடைபெறுவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த சூழ்நிலையை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு நிரந்தரமான, நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுதான் கூட்டமைப்பினுடைய நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.
ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்…. Read more