sssகிளிநொச்சி 155ஆம் கட்டை ஆனந்தநகர் பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாரதிபுரத்தைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான (54) சுப்பிரமணியம் மகேந்திரன் என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சென்ற தபால்ரயிலில் சிக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இவர் தனது வீட்டிலிருந்து நேற்றிரவு 11 மணியளவில் வெளியேறிச் சென்றிருந்த நிலையில், இன்றுஅதிகாலை ரயில் பாதைக்கருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் தனது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றருக்கு அப்பாலுள்ள ரயில் பாதையில் இரவு நேரங்களில் அடிக்கடி உறங்கும் பழக்கத்தைக் கொண்டிருந்ததாக அயலவர்கள் கூறியுள்ளனர்.