fb_img_1475311775076வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் இன்றுகாலை (01.10.2016) 9.30 மணியளவில் சிறுவர்களை மகிழ்வித்து வாழ்த்தும் அவர்களின் உரிமைக்கான சர்வதேச சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வுகள் முன்பள்ளியின் அதிபர் திருமதி. மீரா குணசீலன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு.சுந்தரலிங்கம் காண்டீபன் (திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க பொருளாளரும் வவுனியா மாவட்ட சாரணிய உதவி ஆணையாளர்) கலந்து சிறப்பித்திருந்தார். இந் நிகழ்விற்கு புளொட் அமைப்பின் பிரித்தானியா கிளை உறுப்பினர் திரு.தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் நிதி அனுசரணை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

fb_img_1475311764215 fb_img_1475311769920 fb_img_1475312802452