airportவிமான போக்குவரத்து கட்டுபாட்டு பணியாளர்கள் மந்தகதியிலான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கொடுப்பனவு உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று மாலை 4.45 மணியிலிருந்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.

தங்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விமானப் பயணங்களுக்கு தடையேற்படலாம் என விமான போக்குவரத்து கட்டுப்பாளட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் சஜுன ஹதராகம குறிப்பிட்டார். காரணங்கள் சிலவற்றை அடிப்படையாகக் கொண்டு விமான நிலையங்களில் சேவையாற்றும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில்ஈடுபட்டுள்ளனர்.

தமது பிரதிநிதித்துவமின்றி குழுவொன்றின் ஊடாக கொடுப்பனவுகளை அதிகரித்துக் கொண்டமை, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் சேவையை குறைத்து மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆயினும், விமான போக்குவரத்து கட்டுப்பாளட்டாளர்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்தார்.