sfddமுதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக பெருந்தோட்ட தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டம் இன்று 10வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.

இன்றைய ஆர்ப்பாட்டத்தில் பொகவந்தலாவ, கொட்டியாகலை, டின்சின் கெம்பியன் ஆகிய தோட்டங்களை சேர்ந்த 2500கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்து பேரணியாக சென்றுள்ளனர். இன்றைய ஆர்ப்பாட்டத்தின்போது, முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதானி ஒருவரின் உருவ பொம்மையை சவபெட்டியில் எடுத்துக் கொண்டு பேரணியாக சென்றனர். பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தினை உடனடியாக பெற்று கொடுக்குமாறு வலியுறுத்தியே போராட்டம் நடைபெற்று வருகின்றது.