NPCவடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதனின் இறுதிக்கிரியைகளின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் பொருட்டு, வடமாகாண சபையின் அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று ஆரம்பமானது. இதன்போது, அன்டனி ஜெகநாதனுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இரங்கல் உரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 30 நிமிடங்களில் சபை அமர்வு முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 1ஆம் திகதி முள்ளியவளைப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு கீழே வீழ்ந்து எம்.அன்டனி ஜெகநாதன் உயிரிழந்தார். அவருடைய இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறுகின்ற நிலையில், வடமாகாண சபையின் மாதாந்த அமர்வும் இடம்பெற்றது. இதன்போது, வடமாகாண சபையின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன், துக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக கறுப்புக்கொடியும் கட்டப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.