suicideதூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவர் இன்று மட்டக்களப்பு கூழாவடியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கூழாவடி 8ஆம் குறுக்கை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான புண்ணியமூர்த்தி சக்திவேல் (31) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.