fausiஇராஜாங்க அமைச்சர் ஏ.எச.எம்.பௌசியை எதிர்வரும் 28ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பிலேயே அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர், அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அமைச்சுக்கு சொந்தமான 1 கோடி 90 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஜீப் வண்டியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.