ranilநியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கான விஜயங்களை முடித்துக்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நேற்றிரவு நாடு திரும்பியுள்ளனர். இந்தியாவின் புதுடில்லியில் இருந்து இரவு 10.20க்கு பிரதமர் உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.

நியூசிலாந்துக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்த பின்னர், பிரதமர் அங்கிருந்து நேரடியாக இந்தியாவிற்கு பயணமானார். இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அந்த நாட்டின் சிரேஷ்ட அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் என பலரையும் பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இரு நாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த விடயங்கள் தொடர்பிலும், இலங்கைக்கு சாதகமான விடயங்கள் குறித்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழு இதன்போது கவனம் செலுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.