maithriஆசிய ஒத்துழைப்பு மாநாடு இன்று ஆரம்பமாகிறது. தாய்லாந்தில் இடம்பெறவுள்ள இம்மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ள உள்ளார்.

ஆசிய வலயத்தில் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இம்மாநாட்டில் அவதானம் செலுத்தப்பட உள்ளது. 34 நாடுகளின் பங்களிப்புடன் இன்று ஆரம்பமாகும் இம்மாநாடு எதிர்வரும் 10ம் திகதி வரை இடம்பெற உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, உணவு பாதுகாப்பு, நீர் மற்றும் மின்சக்தி, கலாச்சாரம், சுற்றுலா மற்றும் நிலையான வளர்ச்சி உள்ளிட்ட 20 விடயங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட உள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இம்மாநாட்டில் உரையாற்றவுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ளது.