japan-shipஜப்பான் நாட்டு கடற்படையினருக்குச் சொந்தமான ‘கஷிமா’, ‘செடோசுகி’ மற்றும் ‘அஷகிரி’ ஆகிய கப்பல்கள் ஒத்துழைப்பு, பயிற்சி நடவடிக்கைக்காக நேற்று வெள்ளிக்கிழமை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

கடற்படையினரின் சம்பிரதாயபூர்வ நடவடிக்கைகளுடன் கடற்படை தளபதி, கப்பல்களை வரவேற்றார். எதிர்வரும் 12ஆம் திகதிவரை கொழும்பு துறைமுகத்தில் இந்த கப்பல்கள் நங்கூரமிடப்பட்டிருக்கும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.