pujitha jayasundaraபொதுமக்கள் வழங்கும் மிகவும் முக்கியமான முறைப்பாடுகளுக்கு பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவார்களாயின், அது தொடர்பில் தனது தனிப்பட்ட அலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறு, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, நேற்று அறிவித்துள்ளார்.

ஏதாவது முக்கியமான விடயங்கள் தொடர்பில், பொலிஸ் திணைக்களம், நடவடிக்கை எடுக்கத் தவறுகிறது என, பொதுமக்கள் எண்ணினால், 0718592020 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அழைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கையின் 553வது காவல் நிலையத்தை பட்டிப்பளையில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று உத்தியோகபூர்வமாக திறந்துவைத்து உரையாற்றியபோதே இதனைக் கூறியுள்ளார். அத்துடன் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் சகல மாவட்டங்களிலும் பொதுமக்கள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் பொலிஸ்மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.