mahinda-balasuriyaமுன்னாள் பொலிஸ் மா அதிபரும், தூதுவருமான மஹிந்த பாலசூரிய பாரிய நிதி மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவுக்கு நாளையதினம் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் 5 பேருக்கு சட்ட விரோதமான முறையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதற்கு அரச நிதியிலிருந்து மூன்று கோடி ரூபா முறைகேடாக செலவு செய்துள்ளதாக மஹிந்த பாலசூரியவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வீரவங்சவின் கட்சி உறுப்பினர்களான முகமட் முசம்மில், சிசிர குமார திஸாநாயக்க உட்பட நான்கு பேருக்கு 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு ஜனவரிமாதம் வரை ஆயுதங்களுடன் கூடிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது