udayaஅவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றின் பங்குகளை போலி ஆவணங்கள் ஊடாக (fraudulent Power of Attorney) விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி சந்தேகநபரை 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்து நீதிபதி பத்மினி எம்.ரணவக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.