indian-shipஇந்திய கடலோரக் காவல்படையின் மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பலான, சமுத்ர பகீரெடர், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நேற்று இந்த கப்பல் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு நாடுகளின் கடலோரக் காவல் படைகளுக்கும் இடையில், பரஸ்பர புரிந்துணர்வையும், உறவுகளையும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே இந்தக் கப்பல் கொழும்பு வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்தக் கப்பலில் உள்ள மாலுமிகள், இலங்கை கடலோரக் காவல் படையினருடன் இணைந்து, நிபுணத்துவ, பயிற்சி, மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர். 100 மாலுமிகளுடன் வந்துள்ள இந்தக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லவிருந்தது.