eravurமட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஹிதாயத் நகரிலுள்ள காணியொன்றிலிருந்து கைக்குண்டுகள் இரண்டை, இன்று மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹிதாயத் நகரிலுள்ள செய்யது இப்றாஹிம் ஹமிர் முஹம்மத் என்பவரின் காணியிலிருந்தே இந்தக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. காணி உரிமையாளர், தனது காணியைத் துப்பரவு செய்து வேலி அமைத்துக் கொண்டிருந்தபோது, இந்தக் குண்டுகள் மண்ணுக்குள் தென்பட்டுள்ளன. இது தொடர்பில் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். உடனடியாக ஸ்தலத்துக்;கு விரைந்த புலனாய்வாளர்களும் பொலிஸாரும், கைக்குண்டுகளை மீட்டு அதனைச் செயலிழக்கச் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.