dsssபதுளை நகரின் அருகில் காணப்படும் குப்பை மேட்டில் ஏற்பட்ட தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டு மைதானத்துக்கு அருகில் காணப்படும் 40 வருடகால பழமையான குப்பை மேட்டில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட இந்த தீ விபத்தால் பதுளை நகரம் முழுதும் புகைமண்டல் சூழ்ந்தது. இதனால் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் சுவாசிக்க முடியாமல் மயங்கி விழுந்தோடு வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர். தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு படையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தீவிரமாக செயற்பட்டபோதும் பலனளிக்கவில்லை. குறித்தப் பகுதியில் ஏற்பட்ட புகை மண்டலத்தால் சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாலேயே தீயணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஹெலிகொப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதன்காரணமாக பதுளை நகரில் உள்ள நான்கு பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதோடு, மேலும் இரண்டு பாடசாலைகனை நாளை தற்காலிகமாக மூடப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக, ஊவா மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.