palitha-fernandoபிணையில் விடுவிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ, எதிர்வரும் 24ஆம் திகதி முதல் நவம்பர் 4ஆம் திகதி வரை கட்டாரில் நடைபெறவுள்ள மெய்வல்லுநர் சம்மேளனக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று அனுமதி வழங்கியுள்ளார்.

அவன்ற்கார்ட் மெரிடைம் நிறுவனத்திடமிருந்து 335 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் கீழ், அவருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது. நீதிமன்றத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோவின் கடவுச்சீட்டை 50 இலட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.