doctroஅம்பன்பொல வாகன விபத்தில் வவுனியா டாக்டர் திருமதி கௌரிதேவி நந்தகுமாரும் அவரது பெறாமகளும் மரணமடைந்துள்ளனர்.

மாகோவுக்கும் அம்பன்பொலவுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் வவுனியா வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும், அவருடைய சகோதரியின் மகள் ஒருவரும் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி இவர்கள் பயணம் செய்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொன்டைனர் எனப்படும் கொள்கலன் பொருத்தப்பட்ட வாகனத்தின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு பிள்ளைகளின் தாயாராகிய வவுனியா பொது வைத்தியசாலையின் டொக்டர் திருமதி கௌரிதேவி நந்தகுமார் (49) என்பவரும், அவருடைய சகோதரியின் மகளாகிய சிவதுர்க்கா சத்தியநாதன்(19) ஆகிய இருவருமே இறந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சாரதியான சிவநாதன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மாகோ வைத்தியசாலையில் பொலிசாரினால் கையளிக்கப்பட்டுள்ள இவர்கள் இருவரினதும் சடலங்களை குருணாகலை வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சம்பவம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.