ranilஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொண்டு நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கம் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை பற்றி தொடர்ந்தும் கலந்துரையாட எதிர்வரும் எதிர்வரும் சனிக்கிழமை தான் பிரேசில் நகருக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற 16வது உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றுவது தற்போதைய அரசாங்கத்தின் இலக்கு எனவும் இதன்போது குறிப்பிட்டுள்ள அவர், கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களையும், கட்டுநாயக்க, மத்தல விமான நிலையங்களையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக திருகோணமலை துறைமுகத்தை வங்கக் கடலின் கேந்திர நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.