election.....உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது கலப்பு தேர்தல் முறைமையை பயன்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று நடத்தப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகளின் நிரந்தர பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்குமிடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார். புதிய தேர்தல்முறை தொடர்பான திருத்த சட்டமூலம் குறித்தும் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சட்டவல்லுனர்களின் ஆலோசனைக்கு அமைய புதிய தேர்தல் முறை தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.