sadsdநிலவும் கடும் வரட்சி காரணமாக, நாட்டின் சில பகுதிகளில் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை கிராமத்தில் 162 குடும்பங்கள் வாழ்கின்றனர். இந்த கிராமத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வரட்சியின் தாக்கத்தினால் நீர் இன்றி மக்கள் அல்லலுறுகின்றனர். பல மைல்கள் தூரம் சென்றே தமது நீர் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் வீரச்சோலை கிராம மக்கள் தெரிவித்தனர். இங்கு ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக வாய்க்கால்கள் நீரோட்டம் இன்றிக் காணப்படுவதுடன், கிணறுகள் முற்றாக வற்றியுள்ளன. மனிதர்கள் மாத்திரமன்றி, கால்நடைகளும் குடிநீர் மற்றும் மேய்ச்சல் இன்றி அல்லலுறுகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.