Header image alt text

electric-trainஇலங்கை போக்குவரத்துத் துறையில் மின்சார ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இந்த திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர குறிப்பிட்டுள்ளார். Read more

cheddiவவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் நேற்றுமாலை 6மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பிரதேச செயலகத்தின் மேல்மாடி பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு விரைந்த 50இற்கும் மேற்பட்ட செட்டிகுளம் பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் அத்துடன் மேல்மாடி பகுதியில் இருந்த சில ஆவனங்கள் எரிந்துள்ளதாகவும் மின்னொழுக்கே இதற்கு காரணமாக இருக்குமெனவும் கூறப்படுகிறது. மேற்படி தீவிபத்துச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை செட்டிகுள பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

raviநிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு மீண்டும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ரவி கருணாநாயக்கவினால் மதுபான நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகையை இரத்துச் செய்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more