aarpattam (2)தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர் சமூக மேம்பாட்டு திருப்பணி மற்றும் நீதிக்கும் சமாதானத்துக்குமான சர்வமத அமைப்பு என்பனவற்றின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக முன்றலில் ஆரம்பமாகிய குறித்த பேரணி புதிய மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதிக் வழங்குவதற்கான மகஜரொன்று கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் இதன்போது கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.