kidnapping_2யாழ்ப்பாணம் – இடைக்குறிச்சி – வரணியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கிளிநொச்சி நகரில் வைத்து இனந்தெரியாத நபர்களால் நேற்று மதியம் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகர் தனது வீட்டில் இருந்து கிளிநொச்சியில் உள்ள தனது பதிப்பகத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடத்தல் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் அவ்விடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் கடத்தப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.