courtsகுற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கொழும்பு முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகர முன்வைத்த மனு தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தன்னைக் கைதுசெய்வதைத் தவிர்க்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு, தாக்கல் செய்யப்பட்ட முன் பிணை மனுவை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருத்தத்தை ஏற்படுத்துமாறு கோரிய இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என்.ரணவக்க தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.