jeyam-photoதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் லண்டன் கிளையின் மூத்த உறுப்பினரான தோழர் வேலாயுதப்பிள்ளை ஜெயபாலன் அவர்கள் கடந்த 09ஆம் திகதி லண்டனில் மரணமான செய்திகேட்டு ஆழ்ந்த துயரில் மூழ்கியிருக்கின்றோம்.

யாழ்ப்பாணம் கொக்குவிலை சொந்த இடமாகக் கொண்ட ஜெயபாலன் அவர்கள் லண்டன் ஈஸ்த்ஹாம் நகரை வாழ்விடமாக கொண்டிருந்தார்.

தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்திலே கழக செயற்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டு லண்டன் கிளை ஆரம்பிக்கப்பட்ட காலம்தொட்டே அதில் இணைந்து செயற்பட்டு வந்தார். கழகத்தின் லண்டன் கிளை அங்கத்தவராகவும், பின்னர் அமைப்பாளராகவும் செயற்பட்டவர்.
தோழர் ஜெயபாலன் அவர்கள் கடுமையான சுகயீனத்திற்கு மத்தியிலும் கழகப் பணிகளிலே தன்மை முழுமையாக அர்ப்பணித்து ஈடுபட்டு வந்தார். அவரது இழப்பு கழகத்திற்கு மாத்திரமல்ல, தமிழ் மக்களுக்கும் ஒரு மிகப்பெரும் இழப்பாகும்.

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு கழகத்தின் சுவிஸ் கிளையினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னாருடைய ஆத்மா சாந்திபெற நாங்கள் எமது கண்ணீர் அஞ்சலியை சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
-சுவிஸ்கிளை-