sdssசீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான், பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பீஜிங்கில் கடந்த 11ஆம் திகதி இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக சீன பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. ஏழாவது ஷியாங்சான் பாதுகாப்புக் கருத்தரங்கின் பக்க நிகழ்வாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, இலங்கையுடன் இணைந்து செயற்பட சீன இராணுவம் தயாராக இருப்பதாக சீன பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தவும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பையும், இருதரப்பு மூலோபாய கூட்டை வலுப்படுத்தவும், அவர் விருப்பம் வெளியிட்டுள்ளார்.