policeயாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஐ.எம். பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.

2011ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு பொலிஸ் கட்டுப்பாட்டில் இருந்தபோது தப்பிச்சென்ற சந்தேகநபரின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளைச் சம்பவம் ஒன்றில் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் வாவி ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.