east-campust-trincoகிழக்கு பல்கலைகழகத்தின் திருகோணமலை வளாகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 04 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர் விடுதியில் முன்னெடுக்கப்பட்ட சுத்திகரிப்பின்போது முதலாம் வருட மாணவர்களுக்கும் மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையில் நேற்றுமாலை மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான விசாரணைக் குழு இன்று நியமிக்கப்படவுள்ளதாக திருகோணமலை வளாக முதல்வர் வி.கனகசிங்கம் குறிப்பிட்டுள்ளார். இந்த குழுவின் விசாரணைகளை அடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.