police-stationவவுனியா ஈச்சக்குளம் புதிய பொலிஸ் நிலையம் மற்றும் போகஸ்வௌ புதிய பொலிஸ் நிலையம் என்பன நாளை திறந்துவைக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

ஈச்சங்குளம் புதிய பொலிஸ் நிலையம் நாளை காலை 8.30 மணிக்கும் போகஸ்வௌ புதிய பொலிஸ் நிலையம் முற்பகல் 11மணிக்கும் திறந்துவைக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இந்த பொலிஸ் நிலையங்கள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் திறந்துவைக்கபடவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.