dகேகாலை – கரடுபான பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

51 வயதான இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், தனது வீட்டில் வைத்தே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, இவரால் இறப்பதற்கு முன்னர் கடிதம் ஒன்றும் எழுதிவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதில் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை கொலைசெய்தது நானே, இந்தக் கொலை வழக்கில் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு அதிகாரியை விடுதலை செய்ய வேண்டும் என எழுதப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கேகாலை பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். லசந்த விக்கிரமதுங்கவை, தானே கொலை செய்ததாகவும் தன்னுடைய நண்பன் மலிந்த உதலாகம, குற்றவாளி அல்ல என்றும், அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகின்றது.