Header image alt text

vigneswaranவட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நியமிக்கப்பட்டுள்ள 84 அதிபர்களின் நியமனங்களை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இரத்து செய்துள்ளார்.

வட மாகாண கல்வி அமைச்சின் ஆலோசனைக்கு இணங்கவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

east-campust-trincoகிழக்கு பல்கலைகழகத்தின் திருகோணமலை வளாகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 04 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர் விடுதியில் முன்னெடுக்கப்பட்ட சுத்திகரிப்பின்போது முதலாம் வருட மாணவர்களுக்கும் மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையில் நேற்றுமாலை மோதல் இடம்பெற்றுள்ளது. Read more

police-stationவவுனியா ஈச்சக்குளம் புதிய பொலிஸ் நிலையம் மற்றும் போகஸ்வௌ புதிய பொலிஸ் நிலையம் என்பன நாளை திறந்துவைக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

ஈச்சங்குளம் புதிய பொலிஸ் நிலையம் நாளை காலை 8.30 மணிக்கும் போகஸ்வௌ புதிய பொலிஸ் நிலையம் முற்பகல் 11மணிக்கும் திறந்துவைக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இந்த பொலிஸ் நிலையங்கள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் திறந்துவைக்கபடவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.