dfddfdfdfமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்தக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு நகரில் இன்று கவனயீர்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு மற்றும் தொழிற் சங்கங்கள் இணைந்து காந்தி பூங்கா முன்பாக இந்த நடவடிக்கையினை முன்னெடுத்தனர். தொழிலாளர்களுக்கு வாராந்தம் 6 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும், அரசாங்கமே ஏன் மௌனம், நாள் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்த உத்தரவிடு, தோட்டங்களை கூட்டுறவு சங்க அடிப்படையில் நிர்வகிக்க வேண்டும், உழைப்பைத் தருகின்றோம் எங்கள் ஊதியம் எங்கே?, காட்டிக்கொடுக்கும் தொழிற்சங்கங்களே உடனே விலகிப்போ போன்ற பதாதைகளை தாங்கியும் கோஷங்களை எழுப்பியும் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருமளவு பொதுமக்களுடன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

sadsd asds assasa
dfddf
dfddfff