ranilபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, பெல்ஜியத்தின் தலைநகரான ப்ரசெல்ஸ{க்கு, இன்று பயணமாகவுள்ளார்.

பெல்ஜிய பிரதமர் சார்ள்ஸ் மிச்செல், அந்நாட்டு இளவரசர் லோரன்ட் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய கவுன்ஸில் உயர்மட்டத் தலைவர்களுடன் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆலோசிக்கப்படவுள்ளது.