ritaஇலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களை ஆராயும் நிபுணர் ரீட்டா ஐசாக் நாடியா பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்கிழமை இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் பங்கேற்கவுள்ளனர். இலங்கையில் தமிழினமும் தேசிய இனமாக கருதப்பட்டு சம அந்தஸ்து அளிக்கப்படவேண்டியதன் அவசியம் தொடர்பாக இச்சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தும் என கூறப்படுகிறது.