maithri-modiஇந்தியாவின் கோவாவில் ஆரம்பமாகியுள்ள பிரிக்ஸ் மற்றும் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, இன்றுகாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அயல் நாடான இந்தியாவைச் சந்திப்பதில் சந்தோஷமடைவதாகவும், பிராந்தியத்தின் ஒத்துழைப்பு பற்றி கலந்துரையாடவுள்ளதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.