nadesanமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தங்கை நிரூபமாவின் கணவரான திருக்குமரன் நடேசன் பொலிஸ் நிதி குற்றவிசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மல்வானையில் உள்ள 16 ஏக்கர் காணி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் இன்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானார்.இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட அவரை பூகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.