europeanஇலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்காக முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டசக் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். இலங்கை அடைந்துள்ள தற்போதைய அரசியல் மற்றும் சமூக மறுசீரமைப்புகள், ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்கான விளிம்பிற்கு கொண்டுவந்துள்ளதாகவும் டொனால்ட் டசக் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த வரிச்சலுகை உள்ளிட்ட இலங்கையின் எதிர்கால சவால்களை வெற்றிகொள்வதற்காக ஐரோப்பிய சமூகத்தினால் வழங்கப்படும் சலுகை குறித்து, பிரதமர் இதன்போது தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.