dfdfஆயிரம் ரூபா சம்பளம், வருடத்தில் 300 நாட்கள் வேலை, நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் மலையகத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அக்கரபத்தனை – பெல்மோரல், கிரன்லி, கிலஸ்டல் ஆகிய தோட்ட தொழிலாளர்கள் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, 800ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெல்மோரல் கொழுந்து நிறுவை செய்யும் இடத்திலிருந்து பேரணியாக தொழிற்சாலை வரை சென்றனர்.அங்கு தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், இதன்போது உருவ பொம்மைகளை எரித்தும், டயர்களை எரித்தும், ஒப்பாரி வைத்தும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 730 ரூபா சம்பள உயர்வுடன் 6 நாள் வேலை வழங்கவும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.