14712557_1216530271702104_6465780896257084779_oவவுனியா விபுலாநந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 11.30 மணிவரை கல்லூரியின் அதிபர் திரு எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் வளர்ச்சியிலும், துரித அபிவிருத்தி பணியிலும் பழைய மாணவர்களை உள்வாங்கி, புது உத்வேகத்துடன் கல்லூரியை முன்னணிப் பாதையில் கொண்டுசெல்ல அமைதியான முறையிலும், ஆக்கபூர்வமான கருத்துக்களுடனும் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.
புதிய நிர்வாக சபையில் தலைவராக கல்லூரி அதிபர் திரு எஸ்.அமிர்தலிங்கம் அவர்களும், உப தலைவராக திரு எல்.சுரேந்திரசேகரன், செயலாளராக திரு எஸ்.சுரேந்தர், பொருளாளராக திரு ரி.கார்த்திக், இணைச் செயலாளராக செல்வி எ.திபியா, உப செயலாளராக திரு சாய் பிரசாத் அவர்களுடன் நிர்வாக சபை உறுப்பினர்களாக 14 பேரும், பிரிவு இணைப்பாளர்களாக 04 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

14560129_1216529761702155_120040874711327982_o 14591762_1216530151702116_4763016194010647851_n 14681612_1216530085035456_6480730471513431182_n 14691234_1216529848368813_2652343694507666585_o 14711478_1216529701702161_5628455191888610525_o 14712557_1216530271702104_6465780896257084779_o 14731105_1216529958368802_6851555067999920652_n