justice-of-peaceயாழ். கல்வியங்காடு புதியசெம்மணி வீதியில் அமைந்துள்ள சமாதான நீதவான் வீட்டின் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். சமாதான நீதவான் சுப்பிரமணியம் நமசிவாயம் என்பவரின் வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களால் நேற்று இரவு 9.00 மணியளவில் மதுபானப் போத்தல்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் மேலும் தெரியவருவதாவது,

இத் தாக்குதல் சம்பவம் ஒரு மாத காலமாக இடம்பெற்று வருவதாகவும், குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் 21-09-2016 அன்று முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் பொலிஸாரினால் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இரவு நேரங்களில் வயது முதிர்ந்த எம்மால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. தொடர்ச்சியாக சாராய போத்தல்களால் வீட்டின் முன்னால் எறிந்துடைத்து விட்டு தப்பிச்செல்கிறார்கள். இந்த விடயத்தில் கோப்பாய் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.