student-deadயாழ்.கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகில் நேற்று நள்ளிரவு 11.30மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம்வருட மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவத்தில் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த சுகந்தராசா சுலக்சன் (வயது 24) மற்றும் 155ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்விகற்று வருகின்றார்கள். உயிரிழந்த இருவரின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேதபரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்த விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு சென்றிருந்த யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் சதீஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.