indian-foriegn-secretaryஇந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இன்றுமாலை 4.20 மணியளவில் இவர் வந்தடைந்துள்ளார். 3 உயர்மட்டக்குழுவினருடன் இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ். ஜெய்சங்கர், இலங்கையில் தங்கியிருக்கும் 3 நாட்களில் இந்தியாவின் புதிய முதலீடுகளை ஊக்குவிப்பது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடவுள்ளார். இதன்போது இலங்கையின் உயர்மட்ட அதிகரிகள் மற்றும் வர்த்தகர்களுடன் சந்திப்புக்களை மேற்கொள்வார். இவரது விஜயத்தின் போது எட்கா ஒப்பந்தம் தொடர்பில் எவ்வித பேச்சுக்களும் இடம்பெறாதென கூறப்படுகின்றது.