police ...புத்தளம், கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சிப்பிட்டி வீதியை மறித்து மீனவர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து கற்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கற்பிட்டி கடல் பிரதேசத்தில் ‘லைலா’ வலைகளைப் பாவித்து மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மற்றொரு தரப்பு மீனவர்கள், கடந்த வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று அங்கு பெரும் பதற்றநிலை ஏற்பட்டது. இதன்போது பொதுமக்களின் மோட்டார் சைக்கிள்கள், மீனவப் படகுகள் மற்றும் லொறி என்பன தீக்கிரையாக்கப்பட்டதோடு, பலர் தாக்கப்பட்டு காயமடைந்தும் இருந்தனர்.