kilaliயாழ். கிளாலிப் பகுதியில் மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலசுப்பிரமணியம் -பகீரதன் (வயது 38) என்பவரே படுகாயமடைந்தவராவார். படுகாயமடைந்த அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.