deerசுன்னாகம் பகுதியில் இனந்தெரியாத இளைஞர் குழு நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் பொலிஸார் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்றுபகல் 2மணியளவில் சுன்னாகம் நகருக்குள் இரு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த ஆறுபேர் கொண்ட குழு, சுன்னாகம் பகுதியிலுள்ள பிரபல்யமான பல்பொருள் அங்காடிக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்து வர்த்தக நிலைய உரிமையாளரை வெட்ட முயன்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் சிவில் உடையில் நின்றிருந்த பொலிஸாரையும் அவர்கள் வெட்டியுள்ளனர். இதன்போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த நிமல் பண்டார(வயது52) கையில் வெட்டப்பட்டு படுகாயமடைந்ததுடன், யாழ். பொலிஸ் நிலையத்தை சேர்ந்த எச்.எம்.ஹேர(48) என்பவர்; தலையில் வெட்டப்பட்டு படுகாயமடைந்தும் உள்ளார்.