kajan-funeralபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு இன்று அவரது கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று இரணைமடு பொது மயானத்தில் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பெருந்திரளானவர்கள் கலந்துகொள்ள இறுதி ஊர்வலம் இடம்பெற்றது. எந்த அரசியல்வாதியும் இங்கு உரையாற்றக் கூடாது என பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்த நிலையில், கிராம மட்ட அமைப்புகள், ஒரு சில மாணவர்களின் உரையுடன் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று நிறைவுற்றமை குறிப்பிடத்தக்கது.